close
Choose your channels

'நேர் கொண்ட பார்வை' முதல் காட்சி ஆரம்பம்: போனிகபூர் தகவல்

Tuesday, August 6, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் நாளை மறுநாள் தமிழகம் உள்பட உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கும் நிலையில், நாளை ஒரு சில நாடுகளில் பிரிமியர் காட்சிகளில் ஆரம்பமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான டிக்கெட்டுகள் முன்பதிவு மின்னல் வேகத்தில் முடிவடைந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் சிங்கப்பூரில் இந்திய நேரப்படி இன்று காலை 9 மணிக்கு 'நேர்கொண்ட பார்வை' படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்படுவதாக அறிவித்துள்ளார்

மறைந்த தனது மனைவி ஸ்ரீதேவிக்கு அஜித் நடிக்கும் படத்தை தயாரிக்க வேண்டும் என்ற கனவு இருந்ததாகவும், அந்த கனவு தற்போது நனவாகி உள்ளதாகவும் இந்த கனவு நனவாக அஜித்குமார், வினோத் மற்றும் அனைத்து நடிகர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் கொடுத்த ஒத்துழைப்பிற்கு தனது நன்றியை அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார்

இந்த நிலையில் இன்று சிங்கப்பூரில் 'நேர் கொண்ட பார்வை' படத்தின் முதல் காட்சி நடைபெறுவதால் இந்த படத்தின் முதல் விமர்சனம் இன்னும் சற்று நேரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.