close
Choose your channels

அபிநந்தனுடன் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திப்பு!

Saturday, March 2, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாகிஸ்தான் ராணுவத்தினர்களால் கைது செய்யப்பட்டு பின் இந்தியா மற்றும் உலக நாடுகள் கொடுத்த அழுத்தம் காரணமாக நேற்று விடுதலையான இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனுக்கு சிறப்பான வரவேற்பு எல்லையில் கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்தியா திரும்பிய அபிநந்தனுக்கு இன்று மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா முன்பு ஆஜாரான விமானி அபிநந்தன விளக்கம் அளித்துள்ளார். பாகிஸ்தான் வசம் இருந்தபோது என்ன நடந்தது என்பது பற்றி தளபதியிடம் அபிநந்தன் விளக்கம் அளித்தார்.

இதனையடுத்து டெல்லியிலுள்ள மருத்துவமனையில் இந்திய விமானப்படை அதிகாரி அபிநந்தனை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்தார். இந்த சந்திப்பில் அபிநந்தனின் உடல்நலத்தை அமைச்சர் விசாரித்ததாக தெரிகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.