close
Choose your channels

தீபாவளி வரை இலவச சினிமா: தியேட்டர் உரிமையாளர் அதிரடி அறிவிப்பு

Tuesday, November 10, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 7 மாதங்களுக்கு மேலாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் திரையரங்குகள் திறக்கப்படுகின்றன. இருப்பினும் புதிய திரைப்படங்கள் வெளியாகாததால் எதிர்பார்த்த பார்வையாளர்கள் தியேட்டர்களுக்கு வரவில்லை என்று முதல்கட்ட தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

அதே நேரத்தில் நவம்பர் மாதம் முழுவதும் விபிஎப் கட்டணத்தை ஏற்றுக்கொள்வதாக கியூப் அறிவித்துள்ளதால் தீபாவளி முதல் புதிய திரைப்படங்கள் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் அதன் பின்னர் திரையரங்குகளில் வழக்கம்போல் கூட்டம் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் பார்வையாளர்களை திரையரங்குகளுக்கு வரவழைக்க பல்வேறு உத்திகளை திரையரங்கு உரிமையாளர்கள் செய்து வருகின்றனர். அந்த வகையில் கடலூரைச் சேர்ந்த திரையரங்கு உரிமையாளர் ஒருவர் தனது திரையரங்கில் ரசிகர்களுக்கு தீபாவளி வரை இலவச அனுமதி என்று கூறியுள்ளார்.

இன்று முதல் தீபாவளி வரை இலவச அனுமதி என்பதால் திரையரங்குகளில் கூட்டம் அதிகமாக வரும் என்றும் தீபாவளிக்கு பின் கட்டணம் வசூலிக்கப்பட்டாலும் பெருவாரியான ரசிகர்கள் திரையரங்குக்கு வர வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.