close
Choose your channels

எந்த விபத்தும் என்னை தடுத்து நிறுத்த முடியாது: வேல் யாத்திரை பயணத்தை தொடரும் குஷ்பு!

Wednesday, November 18, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடலூரில் நடைபெற உள்ள வேல் யாத்திரையில் கலந்து கொள்வதற்காக இன்று காலை சென்னையில் இருந்து நடிகையும் பாஜக பிரபலமுமான குஷ்பு தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது செங்கல்பட்டு அருகே அவரது கார் திடீரென ஏற்பட்ட விபத்துக்குள்ளானதை அடுத்து அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இருப்பினும் தான் நலமாக இருப்பதாகவும் தனது வேல் யாத்திரையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்றும் வேறொரு காரில் தற்போதுதான் கடலூருக்கு சென்று கொண்டிருப்பதாகவும் டுவிட்டரில் குஷ்பு பதிவு செய்துள்ளார்.

மேலும் தன்னுடைய கார் சரியான பாதையில்தான் சென்று கொண்டிருந்ததாகவும் திடீரென கண்டெய்னர் எப்படி எங்கள் காரில் வந்து மோதியது என்று தெரியவில்லை என்றும் இதுகுறித்து கண்டெய்னர் டிரைவரிடம் போலீஸார் விசாரணை செய்து வருவதாகவும் அவர் மற்றொரு டிவிட்டில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தன்னை நலம் விசாரித்த அனைவருக்கும் தனது நன்றி என்றும் அனைவருக்கும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கின்றேன் என்றும் குஷ்பு அந்த டுவிட்டில் குறிப்பிட்டுள்ளார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.