close
Choose your channels

விராட் கோலி, தமன்னாவுக்கு சம்மன் அனுப்பிய மதுரை உயர்நீதிமன்றம்… பூதாகரமாகும் விவகாரம்!!!

Tuesday, November 3, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விராட் கோலி, தமன்னாவுக்கு சம்மன் அனுப்பிய மதுரை உயர்நீதிமன்றம்… பூதாகரமாகும் விவகாரம்!!!

 

ஆன்லைன் சூதாட்டத்திற்கு இளைஞர்கள் பலர் அடிமையாகி வரும் நிலையில் அதை தடை செய்யுமாறு மதுரை உயர்நிதிமன்ற கிளையில் நேற்று வழக்கறிஞர் நீலமேகம் என்பவர் ஒரு மனு ஒன்றை வழங்கி இருந்தார். அந்த முறையீட்டு மனுவை வழக்காக பதிவு செய்யும் பட்சத்தில் விசாரணை செய்யப்படும் என நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு வலியுறுத்தினர். அதைத் தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளைத் தமிழகத்தில் தடை செய்யுமாறு மதுரை உயர்நீதி மன்றக் கிளையில் முகமது ரஸ்வி என்பவர் புதிய வழக்கு ஒன்றை தொடுத்து இருக்கிறார்.

அந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. இந்த வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் Play games வரிசையில் ஆன்லைன் கிரிக்கெட்டையும் சேர்ந்து இருந்தார். இதையடுத்து விசாரணையின்போது நீதிபதிகள் ஏன் கிரிக்கெட்டில் சூதாட்டம் நடைபெறுவது இல்லையா? எனக் கேள்வி எழுப்பினர். மேலும் கிரிக்கெட் போட்டிகளில் ஏன் மாநிலப் பெயர்களை பயன்படுத்துகிறீர்கள் எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த வழக்கறிஞர் மாநிலப் பெயர்களை பயன்படுத்தவில்லை என்றால் யாரும் கிரிக்கெட்டை பார்க்க மாட்டார்கள். முற்றிலுமாக மக்கள் மனதில் ஒரு பிம்பத்தை உருவாக்கி தவறாக வழிகாட்டி மக்கள் பார்க்க வைக்கப் படுகிறார்கள். மக்களின் உணர்வுகளோடு விளையாடுகிறார்கள்” எனத் தனது தரப்பு வாதத்தை தெரிவித்தார்.

அதையடுத்து பேசிய நீதிபதிகள் “விளம்பரம் செய்யும் பிரபலமானவர்களில் பலர் பொது மக்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல் அவரவர் பாக்கெட்டுகளை நிரப்புவதில் கவனம் செலுத்துகின்றனர். பொதுமக்களில் பலர் அவர்களை பின்பற்றுவார்கள் என அறிந்தும் இவ்வாறு செயல்படுவது” ஏன் என கேள்வி எழுப்பியதோடு கடுமையான கண்டனத்தையும் தெரிவித்தனர்.

மேலும் இந்த வழக்கில் மத்திய-மாநில அரசுகள், கிரிக்கெட் வீரர் விராட் கோலி, முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலி, நடிகை தமன்னா, நடிகர் பிரகாஷ் ராஜ், சுதீப், ராணா போன்றோருக்கு உயர்நீதிமன்றக் கிளை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு இருக்கிறது. மேலும் நவம்பர் 19 ஆம் தேதிக்கு இந்த வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.