close
Choose your channels

விஜயகாந்த் தனது முடிவில் மாறாமல் இருக்க வேண்டும்: துணை முதல்வர் ஓபிஎஸ் 

Friday, August 24, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சற்றுமுன் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் வரும் 2019ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் தனது கட்சி அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி அடைந்து மக்களுக்கு சேவை செய்யும் என்று கூறியிருந்தார்

அனைத்து தொகுதிகளிலும் தனது கட்சி போட்டியிடும் என்று அறிவித்திருந்ததால் அவர் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என்பதை மறைமுகமாக உறுதி செய்துள்ளார் என்பதையே இந்த அறிக்கை தெரிவிப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் விஜயகாந்த் அவர்களின் இந்த முடிவு குறித்து சற்றுமுன் செய்தியாளர்களிடம் கருத்து கூறிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், 'நாடாளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டி என்ற நிலையிலிருந்து விஜயகாந்த் மாறாமல் இருக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.

அதிமுக, திமுக போன்ற பெரிய கட்சிகளே கூட்டணிக்கு தயாராகி வரும் நிலையில் விஜயகாந்த் தனித்து போட்டி என்ற முடிவை எடுத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.