close
Choose your channels

திடீரென 'லவ்' டுவீட் பதிவு செய்த ஓவியா!

Wednesday, August 19, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை ஓவியா கடந்த சில நாட்களாகவே தனது டுவிட்டர் பக்கத்தில் அதிரடியான சில கருத்துக்களை பதிவு செய்து வருகிறார் என்பது தெரிந்ததே. குறிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டுமா? என்ற கேள்வியை எழுப்பி அதற்கு எழுந்த காரசாரமான விவாதத்தில் அவர் புத்திசாலித்தனமாக பதில் கூறினார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது அவர் லவ் என்ற அன்பு குறித்த ஒரு பதிவை பதிவு செய்துள்ளார். நாம் மிகவும் நேசிப்பவர்கள் நம் அருகில் இல்லாமல் இருந்தாலும், நம்மை விட்டு ஒருபோதும் அவர்கள் விலகி போவதில்லை. அவர்கள் அருகில் இல்லாமல் இருக்கலாம், அவர்களது குரலை கேட்க முடியாமலும் பார்க்க முடியாமலும் இருக்கலாம். ஆனால் அவர்கள் எப்போதும் நம் அருகில் இருப்பதுப் போன்ற ஒரு உணர்வு இருக்கும். நேசித்தவர்களை நாம் மிஸ் செய்தாலும் அவர்கள் நமக்கு எப்போதும் அன்புக்குரியவர்கள், விருப்பத்துக்குரியவர்கள்’ என்று ஓவியா கூறியுள்ளார்.

புரிந்தும் புரியாமல் இருக்கும் ஓவியாவின் இந்த வீட்டுக்கு அவரது ரசிகர்கள் பல்வேறு விதமான கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். ஏற்கனவே ஓவியா தான் யாரையும் காதலிக்கவில்லை என்றும் தான் சிங்கிள் தான் என்றும் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.