close
Choose your channels

ஆஸ்கருக்கு செல்லும் பா ரஞ்சித்தின் அடுத்த படம்.. வேற லெவலில் செயல்படும் படக்குழு..!

Wednesday, May 3, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கி வரும் அடுத்த திரைப்படத்தை ஆஸ்கர் மற்றும் 8 சர்வதேச விருதுகளுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காக வேற லெவலில் சர்வதேச தரத்தில் இந்த படம் உருவாகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’தங்கலான்’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தை ஆஸ்கர் மட்டுமின்றி வேறு சில சர்வதேச விருதுகளுக்கு கொண்டு செல்ல படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அதற்கான பணிகள் இப்போதே தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

சுமார் 1870 முதல் 1940 வரை கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் தங்க வயலில் நடந்த கதையம்சம் கொண்ட இந்த படம் 3டி டெக்னாலஜியில் உருவாகி வருகிறது என்பதும் இந்த படம் நிச்சயம் ஆஸ்கார் உள்பட ஒரு சில சர்வதேச விருதுகளை வெல்லும் என்றும் படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தற்போது ’தங்கலான்’ படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதம் முடிந்து விட்டதாகவும் அடுத்த கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருவதாகவும் தெரிகிறது. சியான் விக்ரமுக்கு இன்று காயம் ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவரின் அறிவுரையின்படி ஓய்வெடுத்து வருவதாகவும் இன்னும் ஒரு சில தினங்களில் அவர் ’தங்கலான்’ படப்பிடிப்பில் இணைந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது. பசுபதி, மாளவிகா மோகன் மற்றும் பார்வதி முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் இந்த படம் தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.