close
Choose your channels

விக்ரமனுக்கு டைட்டில் கிடைக்காததற்கு காரணம் 'பீப்' பிரியாணியா? பா ரஞ்சித்தின் நக்கல் பதில்!

Monday, January 30, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது விக்ரமன் மாட்டுக்கறி சாப்பிட கேட்டதாகவும் அதனால்தான் அவருக்கு பிக்பாஸ் டைட்டில் கிடைக்கவில்லை என்று சமூக வலைதளங்களில் கூறப்பட்டு வரும் நிலையில் இது குறித்த கேள்விக்கு இயக்குனர் பா ரஞ்சித் நக்கலுடன் பதில் அளித்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் இறுதி நாளில் பிக்பாஸ் இடம் மாட்டுக்கறி மற்றும் மீன் வருவல் சாப்பிட விக்ரமன் கேட்டார். ஏற்கனவே மாட்டு கறி பிரச்சனை குறித்து இந்துத்துவ அமைப்புகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில் விக்ரமன் மாட்டு கறி கேட்டதால் தான், அதுவும் மாட்டுப்பொங்கல் அன்று கேட்டதால் தான் அவருக்கு எதிராக அதிக வாக்குகள் விழுந்ததாக சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பரவி வருகிறது.

இந்த நிலையில் இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதில் கூறிய இயக்குனர் பா ரஞ்சித், ‘எனக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து எந்த உடன்பாடும் இல்லை,ஆனால் அதே நேரத்தில் நான் மாட்டுக்கறி நன்றாக சாப்பிடுவேன், நான் தொடர்ந்து வெற்றி பெற்றுக் கொண்டுதான் இருக்கிறேன் என்றும் நக்கலாக பதில் கூறினார்.

மேலும் அவர் இந்த பேட்டியில் ’ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்றும் சமூக நீதிக்கு எதிரான செயல்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றது என்றும் குறிப்பாக வேங்கைவயல் பகுதியில் நடந்த சம்பவம் மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்றும் இந்த சம்பவம் குறித்து உரிய நடவடிக்கையை திமுக அரசு எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.