close
Choose your channels

வேட்புமனு தாக்கல் செய்த பாண்டவர் அணி: சுறுசுறுப்பாகும் நடிகர் சங்க தேர்தல்

Saturday, June 8, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் பாண்டவர் அணியில் ஏற்கனவே உள்ள நிர்வாகிகள் மீண்டும் அவரவர் பதவிக்கு போட்டியிடுகின்றனர். பொன்வண்ணன் மட்டும் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை.

இந்த நிலையில் இன்று பாண்டவர் அணியின் வேட்பாளர்கள் அனைவரும் தங்களுடைய வேட்புமனுவை தாக்கல் செய்தனர். இன்று வேட்பு மனு தாக்கல் செய்தவர்களில் விஷால், லதா, குஷ்பு, பூச்சி முருகன், கருணாஸ் உள்ளிட்டவர்களும் அடங்குவர்.

வேட்புமனு தாக்கலுக்கு பின் பேட்டியளித்த விஷால், கடந்த முறை கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டதாகவும், நடிகர் சங்க கட்டடம் கட்டும் பணி இன்னும் 6 மாதத்தில் நிறைவடையும் என்றும், நடிகர்களின் ஓய்வூதியம் அதிகரித்து வழங்கப்படும் என்றும் கூறினார். மேலும் அரசியலுக்கு அப்பாற்றபட்டு நடிகர் சங்கம் உள்ளதாகவும், சங்கத்திற்கு அரசியல் சாயத்தை பூச வேண்டாம் என்றும் விஷால் கேட்டுக்கொண்டார்.

இந்த நிலையில் பாண்டவர் அணியை எதிர்த்து ஐசரி கணேஷின் அணியில் போட்டியிடும் கே.பாக்யராஜ் உள்ளிட்டவர்கள் விரைவில் வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.