பா.ரஞ்சித்-ஆர்யா படத்தின் டைட்டில் குறித்த தகவல்
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கும் அடுத்த படத்தில் ஆர்யா நடிக்க இருப்பதாகவும், இந்த படத்தின் கதை ஒரு பாக்ஸரின் கதை என்றும் வடசென்னையை மையமாக வைத்து இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளதாகௌம் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் இந்த படத்திற்கு ’சால்பேட்டை பரம்பரை’ என்ற டைட்டில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் ஆர்யாவுடன் ரஞ்சித்தின் ஆஸ்தான நடிகர்களான கலையரசன், தினேஷ் ஆகியோர்களும் முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக தெரிகிறது
மேலும் இந்த படம் கார்த்தி நடித்த ’மெட்ராஸ்’ திரைப்படத்தை அடுத்து இயக்க திட்டமிட்டு இருந்ததாகவும், ஆனால் திடீரென ரஜினிகாந்த் நடித்த ’கபாலி’ மற்றும் ’காலா’ ஆகிய படங்களை அடுத்தடுத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்ததால் இந்த படத்தை இயக்குவது தள்ளிப் போனதாகவும், தற்போது தான் இந்த படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் பா.ரஞ்சித் தரப்பில் இருந்து கூறப்படுகிறது