close
Choose your channels

விருது பெற்றும் ஆதங்கத்தை வெளியிட்ட பார்த்திபன்!

Monday, October 25, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் இயக்கி நடித்த ’ஒத்த செருப்பு’ என்ற திரைப்படத்திற்கு சிறந்த சவுண்ட் எபக்ட் மற்றும் சிறந்த ஜூரிக்கான விருதுகள் கிடைத்த நிலையில் தனது ஆதங்கத்தை பேட்டி ஒன்றின் மூலம் நடிகர் பார்த்திபன் வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, ‘உண்மையாக சொல்வதென்றால் இந்த படத்திற்கு இன்னும் நிறைய விருதுகள் கிடைத்திருக்க வேண்டும் என்றும் ஆஸ்கார் விருதுகள் ஒரே படத்துக்கு நிறைய விருதுகள் கொடுப்பார்கள் என்றும், அதுபோல் இந்த படத்திற்கு சிறந்த நடிகர் விருது உள்பட இன்னும் சில விருதுகள் கிடைத்திருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் எனக்கு என்னுடைய படத்தை பற்றி நன்றாக தெரியும் என்றும், இன்னும் சில விருதுகளை பெற தகுதியான திரைப்படம் ’ஒத்த செருப்பு’ என்றும், இந்த படம் என்னுடைய தனித்துவமான படம் என்றும், அவ்வாறு இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு ஏன் நடிப்புக்கு எனக்கு விருது கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் எனக்கு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்,

இருப்பினும் சிறந்த நடிகருக்கான விருது கிடைக்காத நிலையில் அடுத்த படத்தில் கிடைக்க முழு முயற்சி செய்வேன் என்று கூறியுள்ளார். தனது அடுத்த படம் இரவின் நிழல்’ என்ற சிங்கிள் ஷாட் படம் என்றும் உலகில் இதுவரை யாரும் செய்யாத முயற்சி தான் இந்த படம் என்றும் அவர் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.