close
Choose your channels

3 வருடங்களுக்கு முன் தாக்கல் செய்த விவாகரத்து மனு.. திடீரென மனைவியுடன் சமரசம் ஆன 'பேட்ட' நடிகர்..!

Friday, March 29, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ‘பேட்ட’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகர் தனது மனைவியை விவாகரத்து செய்ய மூன்று ஆண்டுகளுக்கு முன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் தற்போது திடீரென சமரசம் ஆகிய அவர் மனைவி குழந்தையுடன் வாழ சம்மதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ திரைப்படத்தில் வில்லனாக நடித்து இருந்த நடிகர் நவாசுதீன் சித்திக். இவர் தனது மனைவியை விவாகரத்து செய்ய கடந்த 2020 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் இவர்களுக்கு விரைவில் விவாகரத்து கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் தனது குழந்தைகளுடன் துபாயில் வாழ்ந்து வந்த சித்திக் மனைவி ஆலியாவை சமீபத்தில் நவாசுதீன் சித்திக் சந்தித்ததாக தெரிகிறது. அப்போது இருவரும் மனம் விட்டு பேசியதில் மீண்டும் இருவரும் சமரசம் ஆகிவிட்டதாகவும் குழந்தைகளுக்காக இருவரும் இணைந்து வாழ முடிவு செய்ததாகவும் கூறப்பட்டது.

இதனை அடுத்து 14 வது திருமண நாளை துபாயில் கொண்டாடிய புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த ஆலியா, ’மீண்டும் இணைந்து வாழ இருப்பதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இது குறித்து ஆலியா கூறியபோது ’எங்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு மூன்றாவது நபர்கள்தான் காரணம் என்பதை நாங்கள் புரிந்து கொண்டோம். இனிமேல் எங்கள் வாழ்வில் தவறான புரிதல் இருக்காது. நாங்கள் எங்கள் குழந்தைகளுக்கு சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளோம். இருவருக்கும் கெட்ட நினைவுகள் இருந்தாலும் அழகிய அன்பான தருணங்களும் இருப்பதால் இனி வரும் நாட்களில் இனிமையாக வாழ முடிவு செய்துள்ளோம்’ என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.