close
Choose your channels

'இருட்டு அறையில் முரட்டு குத்து' படக்குழுவினர் மீது போலீஸ் புகார்

Tuesday, May 8, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த வாரம் வெளிவந்த கவுதம் கார்த்திக் நடித்த 'இருட்டு அறையில் முரட்டு குத்து' திரைப்படம் வசூல் அளவில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் திரையுலகினர் உள்பட பலர் இந்த படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பச்சை பச்சையான வசனங்கள், அருவருக்கத்தக்க ஆபாச காட்சிகள், படம் முழுவதும் இரட்டை அர்த்த வசனங்கள் என இந்த படம் இருப்பதாக இயக்குனர் பாரதிராஜா, தயாரிப்பாளர் சதீஷ்குமார் உள்பட ஏற்கனவே பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அமைப்பு ஒன்று புகார் கொடுத்துள்ளது. இந்த படத்தின் இயக்குனர் சந்தோஷ் ஜெயகுமார், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ஆகியோர் ஏற்கனவே 'ஹரஹர மகாதேவகி' என்ற ஆபாச படத்தை எடுத்து, மீண்டும் தற்போது 'இருட்டு அறையில் முரட்டு குத்து' என்ற படத்தை எடுத்துள்ளதாகவும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் தங்கள் குடும்ப பெண்களுடன் இந்த படத்தை பார்க்க முடியுமா என்று புகார்தாரர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இருப்பினும் இந்த படம் இளைஞரகளின் பெரும் வரவேற்பை பெற்று நான்கு நாட்களில் ரூ.12 கோடி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.