close
Choose your channels

கமல் வீட்டின் முன் குவிந்த போலீஸ்: ஆழ்வார்ப்பேட்டையில் பரபரப்பு!

Tuesday, May 14, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் சமீபத்தில் இந்து தீவிரவாதி குறித்து பேசிய சர்ச்சைக்குரிய கருத்துக்கு ஒருபுறம் கண்டனங்களும் இன்னொரு புறம் ஆதரவும் குவிந்து வருகிறது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவரது கட்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கமல்ஹாசனின் ஆழ்வார்ப்பேட்டை வீடு முன் இன்று ஒருசில அமைப்புகள் போராட்டம் செய்யவுள்ளதாக வெளிவந்த தகவலை அடுத்து அவரது ஆழ்வார்ப்பேட்டை வீட்டின் முன் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கமல் வீட்டின் முன் சில அமைப்புகள் போராட்டம் நடத்துவது புதிதல்ல. ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சி கலாச்சாரத்தை சீரழித்து வருவதாக சில அமைப்புகள் போராட்டம் நடத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நாகர்கோவிலில் கமல்ஹாசனின் உருவ பொம்மையை இந்து முன்னணியினர் எரித்தனர். இந்து மதத்தை கமல் இழிவுபடுத்தி பேசியதாகப் புகார் தெரிவித்து இந்து முன்னணியினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.