close
Choose your channels

போதைப்பொருள் விவகார வழக்கு: இன்னொரு நடிகையும் சிக்குகிறாரா?

Friday, September 4, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கன்னட திரையுலகில் உள்ள பிரபல நட்சத்திரங்கள் போதை பொருள் பயன்படுத்துவதாக சமீபத்தில் கன்னட இயக்குனர் இந்திரஜித்து லங்கேஷ் அவர்கள் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் முன் ஆஜராகி தனது வாக்குமூலத்தை அளித்தார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பல முன்னணி நடிகர் நடிகைகள் குறித்து விசாரணை நடந்து வருகிறது

இந்த நிலையில் சற்று முன்னர் நடிகை ராகினி திவேதி இது தொடர்பாக கைது செய்யப்பட்டார் என்பதும் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது அடுத்த கட்டமாக இன்னொரு பிரபல கன்னட நடிகைக்கும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளதாகவும் இந்த சம்மனை பெற்றுக் கொண்ட அந்த நடிகை கொரனோ பிரச்சனையை காரணம் காட்டி, பின்னர் ஆஜராவதாக தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது

சம்மன் அனுப்பப்பட்ட இந்த நடிகை தமிழில் பிரபல நடிகையாக இருக்கும் ஒருவரின் சகோதரி என்பதும் இவர் தற்போது ஒரு தமிழ் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. போதைப்பொருள் விவகாரத்தில் அடுத்தடுத்து நடிகைகள் மீது விசாரணை நடைபெற்று வருவது தமிழ் கன்னட திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.