close
Choose your channels

மீண்டும் 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பு: மும்பையில் எடுக்கப்பட்ட முக்கிய காட்சிகள்!

Friday, March 18, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'பொன்னியின் செல்வன்’ என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்ததாகவும் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியது.

மேலும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 30 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் ஒரு சில காட்சிகளின் படப்பிடிப்பு மீண்டும் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது

வந்தியத்தேவன் கேரக்டரில் நடிக்கும் கார்த்தி கப்பலில் இருந்து கடலில் குதித்து தப்பிக்கும் காட்சியும் கார்த்தி மற்றும் ஜெயம்ரவி இருவரும் இணைந்த ஒரு சில காட்சிகளும் மும்பையில் சமீபத்தில் படமாக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மும்பையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த கார்த்தி மற்றும் ஜெயம் ரவியின் புகைப்படங்களும் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது என்பதும், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.