close
Choose your channels

சிவராத்திரி தினத்தில் 'பீஸ்ட்' நாயகி என்ன செய்தார் தெரியுமா? வைரல் புகைப்படம்!

Wednesday, March 2, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள பீஸ்ட் படத்தின் நாயகி பூஜா ஹெக்டே சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக உள்ளார் என்பதும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் 18 மில்லியன் ஃபாலோயர்களை வைத்து உள்ளார் என்பதும் அவர் பதிவு செய்யும் ஒவ்வொரு புகைப்படமும் வீடியோக்களும் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பதும் தெரிந்ததே .

இந்த நிலையில் நேற்று நாடு முழுவதும் மகா சிவராத்திரி விழாவை பொதுமக்கள் கொண்டாடிய நிலையில் பல திரையுலக பிரபலங்களும் சிவராத்திரி கொண்டாடியதன் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன .

இந்த நிலையில் சிவராத்திரி விழாவை கொண்டாடுவதற்காக காசிக்கு சென்ற பூஜா ஹெக்டே அங்கு காசி விசுவநாதர் ஆலயத்தில் வழிபட்டுள்ளார். அது குறித்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் அவர் பதிவு செய்துள்ளார். மேலும் இந்த பதிவில், ‘நமது கனவு நினைவாக, நாம் நினைப்பதெல்லாம் நடக்க, சிவனை வழிபடுவோம், ஓம் நமச்சிவாயா’ என்றும் பதிவு செய்துள்ளார். அவருடைய இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் பூஜா ஹெக்டே தற்போது சிரஞ்சீவியுடன் ’ஆச்சார்யா’ பிரபாஸ் உடன் ‘ராதே ஷ்யாம்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.