close
Choose your channels

பிரபாஸ் உடன் மீண்டும் நடிப்பீர்களா? 'ராதே ஷ்யாம்' தோல்வியை அடுத்து பூஜா ஹெக்டேவின் பதில்!

Sunday, March 20, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பூஜா ஹெக்டே நடித்த ’ராதேஷ்யாம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத நிலையில் பிரபாஸுடன் மீண்டும் நடிப்பீர்களா? என்ற கேள்விக்கு பூஜா ஹெக்டே கூறிய பதில் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

தளபதி விஜய் நடித்த பீஸ்ட்’, சிரஞ்சீவி நடித்து வரும் ’ஆச்சாரியா’ உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஒரே நேரத்தில் நடித்து வரும் நடிகை பூஜா ஹெக்டே என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சமீபத்தில் பிரபாஸுடன் பூஜா ஹெக்டே நடித்த ’ராதேஷ்யாம்’ திரைப்படம் பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்த போதிலும் வசூல் அளவில் தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது

இந்த நிலையில் சமீபத்தில் ’ராதேஷ்யாம்’ படம் குறித்து பூஜா ஹெக்டே கூறிய போது, ‘ஒரு படத்தின் வெற்றி தோல்வியை நாம் தீர்மானிக்க முடியாது என்றும், அது அந்தந்த படங்களை பொருத்தது’ என்றும் கூறினார். மேலும் பிரபாஸ் உடன் மீண்டும் நடிப்பீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த போது, ‘சரியான கதை அமைந்தால் கண்டிப்பாக அவருடன் நடிப்பேன் என்றும் குறிப்பாக ’பாகுபலி 3’ படம் எடுக்கப்பட்டால் அவருடன் இணைந்து நடிக்க ஆசை’ என்றும் அவர் கூறியுள்ளார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.