close
Choose your channels

சிம்கார்டு வாங்க போன நடிகையை பூட்டி வைத்த ஊழியர்கள்: போலீஸ் வந்ததும் என்ன நடந்தது தெரியுமா?

Saturday, October 8, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகை ஒருவர் தனது சிம்கார்டு தொலைந்து விட்டதை அடுத்து புதிய சிம் கார்டு வாங்க தனியார் தொலைத்தொடர்பு அலுவலகம் சென்ற நிலையில் அவரை ஊழியர்கள் பூட்டி வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

’அங்கமாலி டைரீஸ்’ என்ற படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமானவர் நடிகை அன்னா ரேஷ்மா ராஜன். இவர் ‘அய்யப்பனும் கோஷியும்’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார் என்பதும், தற்போது இவர் மூன்று மலையாள படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை அன்னா ரேஷ்மா கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது சிம் கார்டு தொலைந்து போனதை அடுத்து புதிய சிம்கார்டு வாங்க தனியார் தொலைதொடர்பு நிறுவனத்தின் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவர் தன்னை நடிகை என்று காட்டிக்கொள்ளாமல் ஊழியர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார். ஒரு கட்டத்தில் ஊழியர்கள் கேட்ட கேள்வியால் ஆத்திரம் அடைந்த அன்னா ரேஷ்மா வாக்குவாதம் செய்துள்ளார்.

இதனை அடுத்து ஊழியர்கள் அவர் நடிகை என்றே தெரியாமல் அவரை ஒரு அறைக்குள் தள்ளி பூட்டி வைத்தனர். இதனை அடுத்து அவர் அழுது கொண்டே காவல்துறைக்கு தகவல் அளித்தார். தகவலறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு வந்து சிறை வைக்கப்பட்டிருந்த ரேஷ்மாவை மீட்டனர்.

அதன் பிறகுதான் அவர் நடிகை என்று தொலைத்தொடர்பு ஊழியர்களுக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் நடிகையிடம் மன்னிப்பு கேட்டு தயவு செய்து இந்த விஷயத்தை பெரிதாக்க வேண்டாம் என்று கூறியதால் நடிகை அன்னா ரேஷ்மா அவர்களை மன்னித்து விட்டு தனது சிம் கார்டை வாங்கி அங்கிருந்து புறப்பட்டுச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.