close
Choose your channels

புருவத்தை தூக்கி கண்ணடிக்கும் காட்சி படமாக்கப்பட்டது எப்படி? பிரியா வாரியர்

Wednesday, February 14, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒரே ஒரு கண்ணசைவில் உலகப்புகழ் பெறுவது கற்பனையில் கூட முடியாத காரியம் என்ற நிலையில் இதனை உண்மையாக்கி காட்டியுள்ளார் பிரியா பிரகாஷ். ஒரு அதார் லவ் என்ற படத்தின் டீசரில் சக மாணவரை நோக்கி புருவ நடனத்துடன் கூடிய கண்ணடிக்கும் காட்சி இண்டர்நெட்டில் பல நாட்களாக டிரெண்டில் உள்ளது. இந்த ஒரே கண்ணசைவு காரணமாக இவருடைய சமூக வலைத்தள பக்கத்தில் ஃபாலோயர்களின் எண்ணிக்கை பலமடங்கு உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் 'ஒரு அதார் லவ்' படத்தில் இடம்பெற்ற மானிக்க மலராயா பூவி' என்ற பாடலில் நடித்த கண்ணசைவு காட்சி குறித்து பிரியா வாரியர் விளக்கியுள்ளார். இந்த பாடல் படமாக்கப்படும்போது நடுவில் ஏதாவது வித்தியாசமான அசைவு கொடுக்க நினைத்த இயக்குனர் தன்னிடம் புருவத்தை தூக்கி, கண்ணடிக்க முடியுமா என்று கேட்டதாகவும், அதற்கு தான் முயற்சித்துப் பார்ப்பதாக கூறி அந்த காட்சியில் நடித்ததாகவும் கூறினார். இந்த காட்சி முன்கூட்டியே எந்தவித திட்டமும், பயிற்சியும் இல்லாமல் திடீரென  படப்பிடிப்பில் முடிவு செய்த விஷயம் என்றும் பிரியா வாரியர் தெரிவித்தார்.

தற்போது பெண்கள் கல்லூரி ஒன்றில் படித்து கொண்டிருக்கும் தனக்கு இந்த மாபெரும் வரவேற்பால் பொருப்பு அதிகமாகியுள்ளதாகவும், இந்த படத்திற்கு ஏற்பட்ட எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டிய நிலையில் தான் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த பாடல் மிகப்பெரிய டிரெண்டை உருவாக்கியுள்ள நிலையில் இந்த படத்தின் தமிழ் டப்பிங் உரிமையை கைப்பற்ற மிகப்பெரிய போட்டி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.