close
Choose your channels

தனுஷின் 2வது படத்தில் விஜய் பட வில்லன்?

Wednesday, February 14, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் நடித்த 'புலி' திரைப்படத்தில் வில்லனாக நடித்த கிச்சா சுதீப், தனுஷ் இயக்கவுள்ள அடுத்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

தனுஷ் இயக்கிய முதல் படமான 'ப.பாண்டி' நல்ல வெற்றியை பெற்ற நிலையில் விரைவில் அவர் இன்னுமொரு படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தை விஜய்யின் 'மெர்சல்' படத்தை தயாரித்த ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க தனுஷ், சுதீப்பை கேட்டுக்கொண்டதாகவும், தன்னுடைய கேரக்டர் குறித்து தனுஷிடம் கேட்டறிந்த சுதீப் இந்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடந்து வருவதாகவும், விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. தனுஷ் தற்போது 'எனை நோக்கி பாயும் தோட்டா', வடசென்னை மற்றும் 'மாரி 2' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.