close
Choose your channels

இரண்டரை வயது குழந்தையை காப்பாற்ற தனி விமானம் அனுப்பிய பிரியங்கா காந்தி!

Saturday, May 11, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உயிருக்கு போராடி வந்த இரண்டரை வயது குழந்தையை உத்தரபிரதேச மருத்துவமனையில் இருந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல தனி விமானம் அனுப்பி பிரியங்கா காந்தி செய்த உதவி குறித்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி சமீபத்தில் தீவிர அரசியலில் இறங்கி, மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் உத்தரபிரதேசத்தில் உள்ள கமலாநேரு மருத்துவமனையில் இரண்டரை வயது குழந்தை உடல்நலமின்றி சிகிச்சை பெற்று வந்தது. ஆனால் குழந்தையின் நிலைமை மிக மோசமாக இருப்பதாகவும், குழந்தையை காப்பாற்ற வேண்டுமானால் உடனடியாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தினர். ஆனால் குழந்தையின் பெற்றோர்களுக்கு அந்த அளவுக்கு வசதி இல்லை.

இந்த நிலையில் உபி மாநில காங்கிரஸ் தலைவர் ராஜீவ் சுக்லா இதுகுறித்து தேர்தல் பிரச்சாரத்திற்கு உபி வந்திருந்த பிரியங்காவிடம் தெரிவித்து அந்த குழந்தையின் உயிரை காப்பாற்ற உதவிசெய்யும்படி கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து உடனடியாக தனி விமானம் ஏற்பாடு செய்த பிரியங்கா காந்தி, அடுத்த சில மணி நேரத்தில் அந்த குழந்தை டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற உதவி செய்தார். இந்த தகவல் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.