close
Choose your channels

புனித் ராஜ்குமார் குடும்பத்தில் மீண்டும் ஒரு மாரடைப்பு மரணம்! அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

Monday, February 21, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திடீரென மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்ததால்அவரது குடும்பத்தினர் நிலைகுலைந்து போயினர். அவரது மறைவு கன்னட திரையுலகிற்கு மட்டுமின்றி இந்திய திரையுலகிற்கு பெரும் இழப்பாக இருந்தது. இந்த நிலையில் புனித் ராஜ்குமாரின் மரணத்தையே இன்னும் ஜீரணிக்க முடியாத முடியாமல் அவரது குடும்பத்தினர் இருக்கும் நிலையில் தற்போது மேலும் ஒரு மாரடைப்பு மரணம் அவரது குடும்பத்தில் ஏற்பட்டுள்ளது.

புனித் ராஜ்குமாரின் மாமனார் பக்மனே ரேவநாத் என்பவர் நேற்று மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 78. புனித் ராஜ்குமார் மரணமடைந்த தினத்திலிருந்தே பக்மனே ரேவநாத் அதீத மன அழுத்தத்தில் இருந்ததாகவும் இதனை அடுத்து திடீரென அவருக்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும் ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் மரணத்திற்கு பின் புனித் ராஜ்குமார் தனது கண்களை தானம் செய்த நிலையில் அவரது மாமனாரும் தனது கண்களை தானம் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos