close
Choose your channels

இரண்டு வருடங்களுக்கு பின்னர் மீண்டும் இரட்டை விருந்து தரும் ராய்லட்சுமி

Thursday, January 28, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வரும் ராய்லட்சுமி நடித்த 'இரும்புக்குதிரை மற்றும் 'அரண்மனை ஆகிய இரண்டு படங்கள் கடந்த 2014ஆம் ஆண்டு 20 நாள் இடைவெளியில் வெளிவந்து அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. சரியாக இரண்டு வருடங்கள் கழித்து மீண்டும் ராய்லட்சுமி நடித்த இர்ண்டு படங்கள் அதே 20 நாள் வித்தியாசத்தில் வெளியாகவுள்ளது.

ராய் லட்சுமி உள்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்த 'பெங்களூர் நாட்கள்' திரைப்படம் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ரிலீசாகவுள்ளது. இதே நேரத்தில் பிப்ரவரி 26ஆம் தேதி ராய்லட்சுமி நடித்த மற்றொரு படமான 'சவுகார்பேட்டை' திரைப்படமும் ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட இரண்டு படங்களிலும் ராய்லட்சுமிக்கு முக்கிய வேடங்கள் என்பதால் இந்த இரண்டு படங்களின் ரிலீசுக்கு பின்னர் அவரது மார்க்கெட் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இரண்டு படங்களை தவிர நடிகை ராய்லட்சுமி, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் பாலிவுட் படமான 'அகிரா', மற்றும் 'போங்கு' உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.