திமுகவில்  இருந்து என்னை நீக்கிய காரணமே வேற: ராதாரவி

  • IndiaGlitz, [Tuesday,April 23 2019]

'கொலையுதிர்க்காலம்' படத்தின் புரமோஷன் விழா ஒன்றில் நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக ராதாரவி மீது குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் அவர் திமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். கட்சியில் இருந்து தன்னை நீக்கியது குறித்து நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறிய நடிகர் ராதாரவி, 'நயன்தாரா குறித்து பேசியதற்காக என்னை கட்சியில் இருந்து நீக்கவில்லை என்றும், என்னை நீக்கியதன் காரணமே வேறு என்றும் குறிப்பிட்டார்.

தேர்தல் நேரத்தில் நான் பேசியது பெரிதுபடுத்தப்பட்டதால் பெண்களின் ஓட்டு பாதிக்கப்படும் என்று என்னை நீக்கியிருக்கலாம், அல்லது திமுகவில் உள்ள ஒருசிலர் என்னை நீக்கும்படி நிர்ப்பந்தம் செய்திருக்கலாம் என்று கூறிய ராதாரவி, என்னை ஒருசில கட்சிகள் தங்கள் கட்சியில் இணையுமாறு அழைப்பு விடுத்திருப்பதாகவும், நான் பேசியது தவறாக இருந்திருந்தால் அழைத்திருக்குமா? என்றும் கேள்வி எழுப்பினார்.

மேலும் என்னை கட்சியில் இருந்து நீக்கும் முடிவை திமுக தலைவர் ஸ்டாலின் தன்னிச்சையாக எடுத்திருக்க வாய்ப்பு இல்லை என்றும், நிர்ப்பந்தம் காரணமாகவே அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்றும் தான் நம்புவதாக தெரிவித்தார்.

More News

மகனை கொலை செய்து தற்கொலை நாடகமாடிய ஒட்டு மொத்த குடும்பமே கைது!

குடிபோதை அடிக்கடி தகராறு செய்த மகனை பெற்றோர்களும், அவர்களுடைய மற்ற இரண்டு மகன்களும் கொலை செய்துவிட்டு தற்கொலை செய்ததாக நாடகமாடியதால் ஒட்டுமொத்த குடும்பமே தற்போது ஜெயிலில் உள்ளனர்.

ரஜினியின் 'தர்பார்': நயன்தாரா குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட லைகா!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'தர்பார்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக மும்பையில் நடைபெற்று வருகிறது.

தளபதி 63: விஜய் அக்காவாக நடிக்கும் பிரபல நடிகை!

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில்

ஓவியாவின் அடுத்த படத்திற்கு நீதிமன்றம் தடை

விமல், ஓவியா நடித்த களவாணி 2 படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை தி.நகரில் திடீரென பற்றி எரிந்த கார்கள்

சென்னை தி.நகரில் பிசியாக உள்ள ஜி.என்.செட்டி சாலையில், சாலையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் திடீரென தீப்பற்றி எரிந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது