close
Choose your channels

ரஜினியின் 'தர்பார்': நயன்தாரா குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட லைகா!

Tuesday, April 23, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'தர்பார்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக மும்பையில் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி தேர்தல் நடந்ததால் ஓட்டு போட சென்னை திரும்பிய ரஜினிகாந்த், பின் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

இந்த நிலையில் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவிருப்பது தெரிந்ததே. அந்த வகையில் இன்று முதல் ரஜினி-நயன்தாரா காட்சிகள் படமாக்கப்படுவதால் 'தர்பார்' படப்பிடிப்பில் இன்று நயன்தாரா கலந்து கொள்ளவுள்ளார். இதற்காக அவர் நேற்றே மும்பை சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நயன்தாரா இன்றைய படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருப்பதை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா புரடொக்சன்ஸ் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளது.

ரஜினிகாந்த், நயன்தாரா, பிரத்யேக் பாபர், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்து வரும் 'தர்பார்' படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படம் வரும் 2020ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.