close
Choose your channels

ஓவியாவின் அடுத்த படத்திற்கு நீதிமன்றம் தடை

Tuesday, April 23, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விமல், ஓவியா நடித்த களவாணி 2 படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஸ்ரீதனலட்சுமி நிறுவனத்தின் உரிமையாளர் குமரன் என்பவர் 'களவாணி 2' படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்த தடை குறித்து 'களவாணி 2' படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சற்குணம் கூறியபோது, 'நீதிமன்றத்தில் தடை வாங்கிய ஸ்ரீதனலட்சுமி நிறுவனத்திற்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. இந்த படத்தின் ஹீரோ விமலுக்கும் அந்த படத்தயாரிப்பு நிறுவனத்திற்கும் உள்ள பிரச்சனைக்காக நீதிமன்றத்தில் தடை பெற்றுள்ளனர். எனக்கு நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை உள்ளது. விரைவில் நீதிமன்றம் நல்ல் தீர்வு தருவார்கள் என நம்புகிறேன்' என்று கூறியுள்ளார்.

வரும் மே 3ஆம் தேதி 'களவாணி 2' படத்தை வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில் நீதிமன்றத்தின் இந்த தடையால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

விமல், ஓவியா, விக்னேஷ்காந்த், சரண்யா, இளவரசு, கஞ்சா கருப்பு, உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதில் ராஜா முகமது படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.