close
Choose your channels

கேள்வி கேட்பதை சிவாஜியிடம் இருந்து தொடங்க வேண்டும். ராதிகா சரத்குமார்

Friday, December 2, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த ஒரு வாரமாக கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களிலும் நடிகர் சங்க விவகாரம் குறித்த செய்திதான் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கின்றது. நடிகர் சங்க பொதுக்குழு, சரத்குமார்-ராதாரவி நீக்கம், அறக்கட்டளை குறித்த குற்றச்சாட்டுக்கள் ஆகியவை குறித்து சமூக இணையதளங்களில் நடிகர்-நடிகைகள் இடையே சூடு பறக்க விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இதுகுறித்து சரத்குமாரின் மனைவியும் பிரபல நடிகையுமான ராதிகா நடிகர் சங்க நிர்வாகிகளுக்கு சிலகேள்விகளை முன்வைத்துள்ளார். ராதிகா கூறியதாவது:
அறக்கட்டளை விவகாரத்தில் சரத்குமார்-ராதாரவி மீது குற்றம் சாட்டும் கார்த்தி, முதலில் சிவாஜியிடம் இருந்து கேள்வியை தொடங்க வேண்டும். ஏனெனில் சிவாஜி கணேசன் அறக்கட்டளை உறுப்பினராக இருந்தபோது, வாரிசுகள்தான் சங்கப் பொறுப்புகளுக்கு உரிமை என்று மாற்றம் கொண்டுவந்தார். அதனை எஸ்.எஸ்.ஆர் தவறு என்று சுட்டிக்காட்ட பின்னர் சிவாஜி அதனை மாற்றி அமைத்தார். இந்த வரலாறு கார்த்திக்கு தெரியவில்லை என்றாலும் வரலாறு பேசும் அவரது அப்பா சிவகுமாருக்கு நன்கு தெரியும். இவர்கள் கேள்வி கேட்பதை சிவாஜி சாரிடம் இருந்து தொடங்க வேண்டும். அப்படிச் செய்ய முடியுமா?”. என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் சங்கத்தின் கடனை இவர்கள் அடைத்ததாக கூறுவதை நம்ப முடியவில்லை. சரத்குமார் தலைவர் பொறுப்பிலிருந்து சரத் விலகும் போது 1 கோடியே 25 லட்சம் பணம் வைத்துவிட்டுதான் விலகினார். அப்படி இருக்கும்போது எதற்காக பணம் வாங்கிக் கடன் அடைக்க வேண்டும். கடனை அடைத்தோம் என்று விஷால் சொல்லுவதே தவறு.”
நட்சத்திர கிரிக்கெட் போட்டியின்போது மேக்கப் செலவிற்காக மட்டும் பல லட்சங்கள் கணக்கு எழுதியுள்ளனர். எந்த நடிகர் மேக்கப் போட்டு கொண்டு கிரிக்கெட் விளையாடினார் என்பதை விளக்க வேண்டும். நடிகர் சங்கத்தில் நானும் ஆயுட்கால உறுப்பினர் என்பதால் எனக்கு கேள்வி கேட்க உரிமை உண்டு.
நடிகர் சங்கக் கட்டிடம் கட்டிய பின்னர் அந்த கட்டிடத்தில் தான் தன்னுடைய திருமணம் என்று விஷால் கூறியுள்ளார்.. அவர் கட்டிடம் கட்டுவார் என்பதை கூட ஒத்துக்கொள்ளலாம். ஆனால் திருமணம் செய்துகொள்வார் என்பதை எல்லாம் நம்ப முடியாது
இவ்வாறு ராதிகா முன்னணி பத்திரிகை ஒன்றின் பேட்டியில் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.