close
Choose your channels

மகனுக்கு கிடைத்த பட்டம்: பெருமிதம் கொள்ளும் சரத்குமார்-ராதிகா!

Saturday, May 21, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மகனுக்கு கிடைத்த பட்டத்தை நினைத்து பெருமிதம் கொள்வதாக சரத்குமார் மற்றும் ராதிகா தங்களது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளனர்.

சரத்குமார் மற்றும் ராதிகா தம்பதியின் மகன் ராகுல் சமீபத்தில் பட்டப்படிப்பை முடித்துள்ளார். இதனையடுத்து பட்டமளிப்பு விழா சமீபத்தில் நடந்த நிலையில் இந்த விழாவில் கலந்து கொண்ட சரத்குமார் மற்றும் ராதிகா இது குறித்த புகைப்படங்களை தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்து பதிவு செய்து தங்கள் மகனை நினைத்து பெருமை கொள்வதாக கூறியுள்ளனர்.

’யுனிடெட் வேர்ல்ட் காலேஜ் ஆப் சவுத் ஈஸ்ட் ஆசியா’ என்ற கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் பட்டப்படிப்பை முடித்த தங்கள் மகனும் பட்டம் பெற்றதை நினைத்து பெருமை கொள்வதாக ராதிகா தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் ஒரு சிறுவனாக பள்ளியில் சேர்ந்ததிலிருந்து பொறுப்பான வயது வந்த இளைஞராக மாறியதை நினைத்து நானும் சரத்குமாரும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம் என்றும், ராகுலின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் எங்கள் இருவருக்கும் பெருமை என்றும் அவரது எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் என்றும் ராதிகா தெரிவித்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்களையும் அவர் பதிவு செய்துள்ள இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.