close
Choose your channels

நயன்தாரா - ராதாரவி பிரச்சனை குறித்து ராதிகா!

Sunday, March 24, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நேற்று நடைபெற்ற 'கொலையுதிர்க்காலம்' படத்தின் புரமோஷன் விழா ஒன்றில் நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ராதாரவி பேசியது, அதன்பின் இதுகுறித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது ஆதங்கத்தை சமூக வலைத்தளத்தில் தெரிவித்ததையும் பார்த்தோம்.

இந்த நிலையில் விக்னேஷ்சிவனுக்கு ராதாரவியின் சகோதரியும் நடிகையுமான ராதிகா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிலளித்துள்ளார். இன்றைய நிலையில் நயன்தாரா  ஒரு அர்ப்பணிப்பு தன்மையுள்ள நடிகைகளில் வெகுசிலரில் ஒருவர். அவருடன் பணிபுரிந்த காலங்களில் அவரை பற்றி பலவிஷயங்களை தெரிந்து வைத்தவர் என்ற முறையில் இதை நான் கூறுகிறேன். ராதாரவி பேசிய வீடியோ முழுவதையும் நான் பார்க்கவில்லை இருப்பினும் ராதாரவியை இன்று சந்தித்து அவரது கருத்து தவறானது என்று எடுத்து கூறினேன்' என்று கூறியுள்ளார்.

விக்னேஷ் இயக்கிய 'நானும் ரவுடிதான்' படத்தில் நயன்தாராவுடன் ராதிகா நடித்துள்ளார் என்பதும், வரும் மே 1ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள 'மிஸ்டர் லோக்கல்' படத்திலும் இருவரும் இணைந்து நடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.