close
Choose your channels

முடி முடி முடி பகை முடி, வலி கொடுத்தவன் கதை முடி: 'ருத்ரன்' சிங்கிள் பாடல்..!

Thursday, March 16, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ராகவா லாரன்ஸ் நடிப்பில் கதிரேசன் தயாரித்து இயக்கும் ‘ருத்ரன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் ’பகைமுடி’ என்ற சிங்கிள் பாடல் வெளியாகி உள்ள நிலையில் இந்த பாடல் தற்போது வைரல் ஆகி வருகிறது.

ஜிவி பிரகாஷ் கம்போஸ் செய்த இந்த பாடலை திவாகர் பாடியுள்ளார் என்பதும் கருணாகரன் எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அகோரிகளுடன் ராகவா லாரன்ஸ் ஆவேசமாக நடனமாடி இருக்கும் இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

’காஞ்சனா 2’ படத்திற்கு பிறகு ராகவா லாரன்ஸ் உடன் சரத்குமார் நடித்துள்ள இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இன்று வெளியாகியுள்ள ‘பகைமுடி’ என்ற பாடலின் முதல் சில வரிகள் இதோ:

முடி முடி முடி பகை முடி
வலி கொடுத்தவன் கதை முடி
அடி அடி அடி இது சிவன் அடி
பகை விலகும் உறியடி

குமுறுதே குமுறுதே நெஞ்சம் குமுறுதே
பகையினை முடித்திட உயிரும் உறுமுதே
உறுமுதே உறுமுதே சினமும் உறுமுதே
சதையினை தாண்டியே உதிரம் கொதிக்குதே..

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.