close
Choose your channels

மாவட்ட செயலாளர்களை சந்திக்கும் ரஜினி: இன்று முக்கிய அறிவிப்பா?

Thursday, March 5, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இன்று ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்களை அவர் சந்திக்கிறார். இதனை அடுத்து தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட செயலாளர்கள் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரா திருமண மண்டபத்தில் கூடி உள்ளனர். அவர்களை சந்திப்பதற்காக ரஜினி சற்று முன்னர் தனது போயஸ் கார்டன் வீட்டிலிருந்து கிளம்பி தற்போது ஸ்ரீ ராகவேந்திரா மண்டபத்தை அடைந்துள்ளார்.

இன்று நடைபெறும் மாவட்ட செயலாளர் கூட்டத்தில் ரஜினிகாந்த் முக்கிய ஆலோசனையில் ஈடுபட இருப்பதாகவும், அரசியல் கட்சி தொடங்குவது, காலியாக உள்ள 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலில் போட்டியிடுவது ஆகியவை குறித்து முக்கிய ஆலோசனை இன்று நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் மாவட்ட செயலாளர்கள் உடனான சந்திப்பு முடிந்ததும் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்து சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ரஜினி இன்று ராகவேந்திரா மண்டபத்தில் வருகை தருவதாக செய்திகள் வெளிவந்ததை அடுத்து ரஜினி ரசிகர்கள் நூற்றுக்கணக்கானோர் அந்த மண்டபத்தின் முன் கூடி உள்ளதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.