close
Choose your channels

பிரதமர் மோடி பலசாலியா? என்ற கேள்விக்கு ரஜினிகாந்த் அளித்த பதில்

Tuesday, November 13, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தின் முன் செய்தியாளர்களை சந்தித்தார். 'எந்த 7 பேர் என்பது குறித்த சர்ச்சைக்கும், பாஜக ஆபத்தான கட்சியா? என்பது குறித்த விளக்கத்தையும் அப்போது அவர் அளித்தார்.

மேலும் பாஜகவுக்கு எதிராக அமைக்க முயற்சி செய்து வரும் 'மெகா கூட்டணி' குறித்த கேள்விக்கு பதிலளித்த ரஜினிகாந்த், 'பத்து பேர் சேர்ந்து ஒருவரை எதிர்க்கின்றார் என்றால் அந்த பத்து பேர் பலசாலியா? அல்லது பத்து பேரை எதிர்கொள்பவர் பலசாலியா? என்று மறுகேள்வியையே அந்த கேள்விக்கு பதிலாக கூறினார். இதனையடுத்து ஒரு நிருபர் 'பத்து பேர்தான் பலசாலிகள்' என்று கூற அதற்கு ரஜினிகாந்த், 'பத்து பேர்கள் பலசாலிகள் என்றால் அந்த பத்து பேரை எதிர்க்கும் ஒருவர் அதைவிட பலசாலிதானே! என்று கூறினார்.

மேலும் 'இலவசங்கள் பிச்சைக்காரர்களுக்குத்தான் தேவை என்று கமல்ஹாசன் கூறியது குறித்த கேள்விக்கு 'கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று ரஜினிகாந்த் பதிலளித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.