close
Choose your channels

விவாகரத்து வழக்கு: செளந்தர்யா ரஜினிகாந்த் நீதிமன்றத்தில் ஆஜர்

Friday, June 23, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் இளையமகளும், இயக்குனருமான செளந்தர்யா ரஜினிகாந்த் தனது கணவர் அஸ்வினை விவாகரத்து செய்வது குறித்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெறுவதை அடுத்து செளந்தர்யா ரஜினிகாந்த் இன்று சென்னை முதன்மை குடும்பநல நீதிமன்றத்தில் ஆஜரானார். அவர் மட்டுமின்றி அவரது கணவர் அஸ்வின் ராம்குமாரும் நீதிமன்றத்தில் ஆஜரானார். இன்றைய விசாரணைக்கு பின்னர் விவாகரத்து குறித்த தீர்ப்பை நீதிமன்றம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2010ஆம் ஆண்டு அஸ்வின் - செளந்தர்யா திருமணம் நடைபெற்றது என்பதும் இந்த தம்பதிக்கு வேத் என்ற குழந்தை உள்ளது என்பதும் அனைவரும் அறிந்ததே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.