close
Choose your channels

ரசிகர்களுக்கு 6 மொழிகளில் நன்றி தெரிவித்த ரம்பா: காரணம் இதுதான்!

Saturday, June 26, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 90களில் தமிழ் உள்பட தென்னிந்திய திரையுலகில் பிரபலமாக இருந்த நடிகை ரம்பா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆறு மொழிகளில் தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழில் ’உழவன்’ என்ற திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகை ரம்பா அறிமுகமானாலும் ’உள்ளத்தை அள்ளித்தா’ என்ற திரைப்படம்தான் ரம்பாவுக்கு மிகப்பெரிய வெற்றியை தேடித்தந்தது. அதன்பின்னர் அவர் ரஜினிகாந்த், விஜய், அஜித், சரத்குமார் உள்பட பல பிரபல நடிகர்களுடன் நடித்தார் என்பது சுமார் பத்து வருடங்களில் அவர் தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதன்பின்னர் கனடாவை சேர்ந்த தொழிலதிபர் இந்திரன் பத்மநாபனை திருமணம் செய்து கொண்டார் என்பதும் தற்போது ரம்பாவுக்கு 2 மகள்கள் ஒரு மகன் இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் ரம்பாவுக்கு தற்போது 2 மில்லியன் ஃபாலோயர்கள் கிடைத்துள்ளனர். இதனை அடுத்து அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது நன்றியை தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில் அவர் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம், கன்னடம், மலையாளம் என ஆறு மொழிகளில் நன்றி கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவில் அவர் மேலும் கூறியதாவது: திரைத்துறையில் எனது வாழ்க்கையைத் தொடங்கி கிட்டத்தட்ட மூன்று தலைமுறை நெருங்கிவிட்டது. இந்த ஆண்டுகளில், உங்கள் அன்பும் ஆதரவும் குறைந்து வருவதை நான் ஒருபோதும் உணர்ந்ததில்லை. நான் திரையில் இல்லாமல் இருக்கலாம், ஆனால் நான் எப்போதும் உங்களுடன் எப்போதும் நெருக்கமாக இருக்கிறேன். எனது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உங்கள் அனைவருக்கும் எனது நன்றி’ என தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.