close
Choose your channels

ஒட்டுமொத்தமாக சிராஜ் வீட்டிற்குப் படையெடுத்த ஆர்சிபி அணியினர்… வைரலாகும் புகைப்படம்

Wednesday, May 17, 2023 • தமிழ் Sport News Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் விளையாடிவரும் முகமது சிராஜ் கட்டியுள்ள புது வீட்டிற்கு ஒட்டுமொத்த ஆர்சிபி அணி வீரர்களும் வருகை தந்திருந்த புகைப்படம் ரசிகர்களிடையே தற்போது உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

நடப்பு ஐபிஎல் சீசனின் லீக் போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஐபிஎல் கோப்பையை வெல்வது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது. அதிலும் துவக்கம் முதலே அதிக ஆக்ரோஷம் காட்டிவந்த ஆர்சிபி அணி குறித்தும் தற்போது நடைபெற்று வரும் போட்டிகளில் அந்த அணி மோசமாக ஆடுவதையும் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியக் கிரிக்கெட் வீரரும் ஆர்சிபி அணியில் இடம்பெற்று விளையாடிவரும் வீரருமான முகமது சிராஜ் வீட்டிற்கு அந்த அணியின் அனைத்து வீரர்கள் வருகை தந்துள்ளனர். காரணம் ஹைதராபாத்தில் உள்ள ஜுப்லி ஹில்ஸ் பகுதியில் சிராஜ் புது வீட்டைக் கட்டியுள்ளார். இந்த வீட்டிற்கு தனது அணி வீரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அந்த அழைப்பை ஏற்று முன்னாள் கேப்டன் விராட் கோலியைத் தவிர தற்போதைய கேப்டன் டூப்ளசிஸ் வரை அனைத்து வீரர்களும் சென்றிருந்தனர். இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி தற்போது ரசிகர்களிடையே புது உற்சாகம் ஏற்பட்டு இருக்கிறது.

நடப்பு ஐபிஎல் சீசனைப் பொறுத்த வரைக்கும் ஆர்சிபி அணி இதுவரை 12 போட்டிகளில் பங்குபெற்று 6 வெற்றியைப் பெற்றிருக்கிறது. இதனால் புள்ளிப்பட்டியலில் 5 ஆவது இடத்தில் இருக்கிறது. மீதமுள்ள 2 போட்டிகளிலும் ஆர்சிபி அணி வெற்றிப்பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதிப்பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.