close
Choose your channels

நிஜ ஆதித்யா அருணாச்சலம் இவர்தானா? ஒரு சுவாரஸ்யமான தகவல்!

Friday, January 10, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்’ படம் நேற்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் கதை ஏற்கனவே மும்பையில் நடைபெற்ற ஒரு உண்மை நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டது என டுவிட்டரில் ஒருவர் பதிவு செய்துள்ளார்.

மும்பையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வரதராஜ முதலியார் என்ற தாதா இருந்ததாகவும் அவரை பிடிக்க ஒய்.சி.பவார் என்ற போலீஸ் அதிகாரி பல்வேறு விதங்களில் எடுத்த முயற்சியால் வரதராஜ முதலியார் வேறு வழியின்றி சென்னைக்கு தப்பி வந்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தக் இந்த நிஜ சம்பவத்தை தான் கொஞ்சம் திரைப்படத்திற்காக மாற்றி ஒய்.சி.பவார் கேரக்டரை ஆதித்யா அருணாச்சலம் என ஏஆர் முருகதாஸ் ’தர்பார்’ திரைப்படத்தை எடுத்துள்ளதாக அந்த நபர் டுவிட்டரில் குறிப்பிடப்பட்டுள்ளார்.

ஏற்கனவே இதே சம்பவத்தை வைத்து தான் கமல்ஹாசனின் நாயகன் படம் உருவாக்கப்பட்டதாகும் வரதராஜ முதலியார் கேரக்டர்தான் கமல் கேரக்டர் என்றும் ஒய்.சி.பவார் கேரக்டர்தான் நாசர் கேரக்டர் என்றும் அதே நபர் அந்த ட்வீட்டில் குறிப்பிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.