close
Choose your channels

ரிஷப் ஷெட்டியின் பிறந்த நாளில் மனைவி பிரகதி ஷெட்டியின் முக்கிய அறிவிப்பு.. குவியும் வாழ்த்துக்கள்..!

Sunday, July 9, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி சமீபத்தில் தனது பிறந்தநாளை ரசிகர்கள் முன்னிலையில் கொண்டாடிய நிலையில் இந்த பிறந்தநாள் விழாவில் அவரது மனைவி பிரகதி ஷெட்டி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

’காந்தாரா’ என்ற வெற்றி திரைப்படத்தில் நடித்த ரிஷப் ஷெட்டி பிறந்த நாள் ஜூலை 7ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் ரிஷப் ஷெட்டி பேசியபோது ’ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த எனக்கு சினிமா துறையில் இவ்வளவு பெரிய இடத்தை நீங்கள் கொடுப்பீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

’காந்தாரா’ திரைப்படத்தின் மீது நீங்கள் காட்டிய அன்பால் தற்போது அது உலக திரைப்படமாக மாறி உள்ளது. உங்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவிக்க நீண்ட நாட்களாக ஆவலுடன் காத்திருந்த நிலையில் இன்றைய பிறந்த நாளில் அது நிறைவேறி உள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த ரசிகர்கள், நண்பர்கள் மற்றும் எனது மனைவி பிரகதி ஷெட்டி ஆகியோர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

இந்த நிலையில் ரிஷப் ஷெட்டி பிறந்தநாளில் ’ரிஷப் ஷெட்டி அறக்கட்டளை’ நிறுவப்படுவதாக அவரது மனைவி பிரகதி அறிவித்தார். இந்த அறக்கட்டளை மூலம் கர்நாடக மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு உதவி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். கல்வியின் முக்கியத்துவத்தை நினைவூட்டும் வகையில் இந்த அறக்கட்டளை செயல்படும் என்றும் அவர் கூறினார். இதையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

ஏற்கனவே பல ஆண்டுகளாக கர்நாடகாவில் உள்ள அரசு பள்ளிகளுக்கு ரிஷப் ஷெட்டி உதவி செய்து வருகிறார் என்பதும், ஆனால் அவர் ஒருபோதும் இதை விளம்பரப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.