close
Choose your channels

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: சரத்குமார் கட்சி மனு தள்ளுபடி

Friday, March 24, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன், மதுசூதனன், மருதுகணேஷ், தீபா மற்றும் சீமானின் நாம் தமிழர் வேட்பாளர் கலைக்கோட்டுதயம் உள்பட 100க்கும் மேற்பட்டோர் போட்டியிட மனுதாக்கல் செய்துள்ளனர். இவர்களில் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் வேட்பாளர் அந்தோணி சேவியர் என்பவரும் ஒருவர்.
இந்நிலையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் அதிமுக புரட்சித்தலைவி அம்மா கட்சி சார்பில் போட்டியிடும் மதுசூதனன் மற்றும் திமுகவேட்பாளர் மருதுகணேஷ், தேமுதிக வேட்பாளர் மதிவாணன் ஆகியோர்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அதிகாரபூர்வமான அறிவிப்புகள் வெளிவந்துள்ளது.
ஆனால் அதே நேரத்தில் சரத்குமார் கட்சி வேட்பாளர் அந்தோணி சேவியர் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது . நிராகரிப்புக்கான காரணம் இன்னும் வெளிவரவில்லை. டிடிவி தினகரனின் வேட்புமனு இன்னும் பரிசீலிக்கப்படவில்லை. இதுகுறித்த தகவல் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.