பிரபல ரவுடி பினு போலீசில் சரண் அடைந்தது ஏன்? திடுக்கிடும் தகவல்

  • IndiaGlitz, [Tuesday,February 13 2018]

சென்னையை ஆட்டிப்படைத்து வந்த பிரபல ரவுடி பினு, போலீசாரால் தேடப்பட்டு வந்த நிலையில் சற்றுமுன்னர் சென்னை அம்பத்தூர் காவல்நிலையத்தில் சரண் அடைந்தார்.

கடந்த 6ஆம் தேதி ரவுடி பினு தனது பிறந்த நாளை நூற்றுக்கும் மேற்பட்ட ரவுடிகளுடன் கொண்டாடிய போது திடீரென போலீசார் சுற்றி வளைத்தனர். இந்த அதிரடி நடவடிக்கையில் 71 ரவுடிகள் கைது செய்யப்பட்டபோதிலும் ரவுடி பினு தப்பியோடிவிட்டார்.

இந்த நிலையில் ரவுடி பினுவை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். உயிருடன் அல்லது என்கவுண்டர் செய்து பிடிக்க போலீசார் திட்டமிட்ட நிலையில் இன்று ரவுடி பினு சரண் அடைந்தார். என்கவுண்டருக்கு பயந்தே அவர் சரண் அடைந்ததாக கூறப்படுகிறது. சரண் அடைந்துள்ள ரவுடி பினுவிடம் போலீசார் அவர் மீதான வழக்குகள்  குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

More News

ஏலம் குறித்த செய்திக்கு கவிதாலயா நிறுவனம் விளக்கம்

கோலிவுட் திரையுலகில் புரட்சியை ஏற்படுத்திய இயக்குனர் இமயம் கே.பாலசந்தர் அவர்களின் தயாரிப்பு நிறுவனமான கவிதாலயா நிறுவனம் வங்கி ஒன்றினால் ஏலத்திற்கு வருவதாக நேற்று செய்திகள் வெளிவந்தன

காதலர் தினத்தில் கைகோர்க்கும் கவுதம் மேனன் - சூர்யா

பிரபல இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்த 'காக்க காக்க', 'வாரணம் ஆயிரம்' போன்ற படங்கள் பெரும் வெற்றியை பெற்றது. அதன்பின்னர் மீண்டும் இருவரும் விரைவில் ஒரு படத்தில் இணைவார்கள்

மாதவன் தம்பதியின் தொடரும் காமெடி காட்சிகள்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வீட்டில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் போலி வருமான வரித்துறை அதிகாரி போல் நடித்த பிரபாகர் என்பவர் கைது செய்யப்பட்டார்

ஒரே இரவில் உலகப்புகழ் பெற்ற புருவ டான்ஸ் நடிகை

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு டான்ஸ் ஆடிய ஷெரில் சமூக வலைத்தளங்களில் பல நாட்கள் டிரெண்டில் இருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே.

விஷால் மீது கொலை மிரட்டல் புகார் அளித்த பிரபல தயாரிப்பாளர்

தென்னிந்திய நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.