close
Choose your channels

ஏலம் குறித்த செய்திக்கு கவிதாலயா நிறுவனம் விளக்கம்

Tuesday, February 13, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் புரட்சியை ஏற்படுத்திய இயக்குனர் இமயம் கே.பாலசந்தர் அவர்களின் தயாரிப்பு நிறுவனமான கவிதாலயா நிறுவனம் வங்கி ஒன்றினால் ஏலத்திற்கு வருவதாக நேற்று செய்திகள் வெளிவந்தன. இதுகுறித்து ஆங்கில பத்திரிகை ஒன்றில் வங்கியின் விளம்பரமும் வந்திருந்தது

இந்த நிலையில் கவிதாலயா நிறுவனம் ஏலத்திற்கு வருவதாக வெளிவந்துள்ள செய்தியை அந்நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் மறுத்துள்ளார். குறிப்பிட்ட வங்கியில் கவிதாலயா நிறுவனம் கடன் வாங்கியது உண்மை எனினும், மொத்த கடனையும் ஒரே செட்டில்மெண்டில் முடிக்க வங்கி அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், எனவே ஏலத்திற்கு வருவதாக வெளிவந்துள்ள செய்தியில் உண்மையில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இயக்குனர் கே.பாலசந்தர் தனது கவிதாலயா நிறுவனத்தின் மூலம் ரஜினி, கமல், விஜய், விக்ரம், அரவிந்தசாமி உள்பட முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.