close
Choose your channels

'இறைவி' பட வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த தயாரிப்பு நிறுவனம்

Wednesday, February 17, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'இறைவி' திரைப்படம் வரும் மார்ச் 25ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என சமீபத்தில் தகவல்கள் வெளிவந்த நிலையில் இந்த தகவலுக்கு படத்தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. 'இறைவி' படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும், ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை விரைவில் அதிகாரபூர்வமாக வெளியிடுவோம் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

விஜய்சேதுபதி நடித்த 'சேதுபதி' பிப்ரவரி 19ஆம் தேதியும், 'காதலும் கடந்து போகும்' திரைப்படம் வரும் மார்ச் 11ஆம் தேதியும் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் அடுத்த ஒரு சிறு இடைவெளியில் விஜய்சேதுபதியின் மற்றொரு படம் வெளியானால் படத்தின் வசூல் பாதிக்கப்படலாம் என்பதால் உடனடியாக ஸ்டிடுயோக்ரீன் நிறுவனம் இந்த மறுப்பை அறிவித்துள்ளது என கூறப்படுகிறது.
விஜய்சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபிசிம்ஹா, அஞ்சலி, கமாலினி முகர்ஜி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஸ்டுடியோக்ரீன் நிறுவனங்கள் தயாரித்துள்ள இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.