close
Choose your channels

ஜோக்கர்' படத்திற்கு சகாயம் ஐ.ஏ.எஸ். கொடுத்த விமர்சனம்

Saturday, August 20, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் ராஜூமுருகன் இயக்கிய 'ஜோக்கர்' திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி அனைத்து தரப்பினர்களின் பாராட்டுக்களை பெற்று வருகிறது. இப்போதைக்கு ஒரு திரைப்படம் இந்த அளவுக்கு அதிக அளவிலான விஐபிக்கள் பாராட்டியதாக தெரியவில்லை. திரைப்படம் பார்க்கும் பழக்கமே இல்லாத விஐபிக்கள் கூட இந்த படத்தை பார்த்து படக்குழுவினர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஊழலை எதிர்த்து போராடும் நேர்மையான ஐஏஎஸ் அதிகாரி என்ற பெயர் பெற்ற சகாயம் ஐஏஎஸ் அவர்கள் சமிபத்தில் இந்த படத்தை பார்த்து ராஜூமுருகனுக்கும் படக்குழுவினர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் இந்த படம் குறித்து கூறியதாவது:
ராஜுமுருகனின் இயக்கத்தில் வெளிவந்துள்ள ஜோக்கர் திரைப்படம் சமூக அவலங்களை தெளிவாக எடுத்துகாட்டுவதோடு மட்டுமல்லாது , சமூக அவலங்களுக்கு அநீதிகளுக்கு எதிராக போராடுபவர்களை இந்த சமூகம் பார்க்கிற விதத்தை அது சுட்டி காட்டுகிறது. குறிப்பாக சமூக அநீதிகள், துடைத்தெறிய வேண்டிய ஊழல் போன்ற சமூக அநீதிகளுக்கு எதிராக போராடுபவர்களை இந்த சமூகம் ஜோக்கர்களாக கோமாளிகளாக பார்க்ககூடிய இந்த இழந்த மனநிலை மாறவேண்டும் என்ற பாடத்தை மிக அற்புதமாக இந்த படம் எடுத்து சொல்கிறது.
எனவே தமிழ் சமூகம் ஆதிரிக்க வேண்டிய இலக்கியம் போன்ற காவியம் போன்ற ஒப்பற்ற படம் ஜோக்கர். குறிப்பாக மாணவர்கள், இளைஞர்கள் என அனைவரும் பார்க்கவேண்டிய அற்புதமான, தமிழ் சமூகம் ஆதரிக்க வேண்டிய படைப்பு என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.