close
Choose your channels

'விஜய் 59' படப்பிடிப்பில் சமந்தா-எமிஜாக்சன் கலந்து கொள்ளாதது ஏன்?

Monday, July 6, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'விஜய் 59' படத்தின் படப்பிடிப்பு கடந்த 1ஆம் தேதி முதல் நடந்து வருகின்றது. இந்த படப்பிடிப்பில் விஜய் தினமும் கலந்து கொண்டு நடித்து கொண்டிருந்தபோதிலும், இந்த படத்தின் நாயகிகளான சமந்தா மற்றும் எமிஜாக்சன் ஆகிய இருவரும் இன்னும் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை.

இதுகுறித்து படக்குழுவினர் கூறியபோது, 'தற்போது விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் மட்டும் படமாக்கப்பட்டு வருவதாகவும், சமந்தா மற்றும் எமிஜாக்சன் இருவருமே வேறு படங்களின் படப்பிடிப்பில் பிசியாக இருப்பதால் இருவரும் அடுத்தகட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் தற்போது விஜய்யின் அறிமுகப்பாடல் படமாக்கப்பட்டு வருவதாகவும் படக்குழுவினர்களிடம் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த படத்திற்காக விஜய் பல்க்காக கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பருக்குள் முடிக்க அட்லி உள்பட படக்குழுவினர்கள் தீவிரமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகின்றார். பிரபல இயக்குனர் மகேந்திரன் இந்த படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.