close
Choose your channels

முடிவுக்கு வந்த சந்தானம் நடித்த அடுத்த படத்தின் படப்பிடிப்பு

Monday, September 23, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சந்தானம் நடித்த ’தில்லுக்கு துட்டு’ மற்றும் ஏ1 ஆகிய இரண்டு படங்களும் இந்த ஆண்டு அவருக்கு வெற்றிப் படங்களாக அமைந்துள்ள நிலையில், தற்போது அவர் மூன்று படங்களில் நடித்து வருகிறார். அவற்றில் ஒன்று ’டகால்டி’.

கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இதனை சந்தானம் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

முதல்முறையாக சந்தானம் இந்த படத்தில் இரண்டு வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ளார். அவற்றில் ஒன்று மும்பையில் வாழும் தமிழ்ப்பையன் வேடம். சந்தானம் ஜோடியாக பெங்காலி நடிகை ரித்திகாசென் நடிக்கும் இந்த படத்தில் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

விஜய் ஆனந்த் இயக்கியுள்ள இந்த படத்திற்கு விஜய் நரேன் இசை அமைத்துள்ளார். தீபக்குமார் ஒளிப்பதிவில் சுரேஷ் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. இந்த படம் இவ்வருட இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படம் சந்தானத்தின் ஹாட்ரிக் வெற்றி படமாக அமையுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.