close
Choose your channels

பீப் பாடல் குறித்து நடிகர் சங்கம் கருத்து தெரிவிக்காதது ஏன்? சரத்குமார்

Sunday, December 20, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அனிருத் இசையமைத்ததாகவும், சிம்பு பாடியதாகவும் கூறப்படும் பீப் பாடலுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் வரும் நிலையில் முன்னாள் நடிகர் சங்க தலைவர் சரத்குமார் இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது: "பெண்ணையோ, பெண் இனத்தையோ தவறாக சித்தரிக்கின்ற, அது படமாக இருந்தாலும் சரி, பாடலாக இருந்தாலும் சரி... அது வரவேற்கத்தக்கது அல்ல என்பது என்னுடைய கருத்து. அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.

இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் சங்க தலைவர் நாசர், நிர்வாகிகள் கருத்து தெரிவிக்காதது ஏன்? என்று தெரியவில்லை. கடந்த காலங்களில் இதேபோன்று பல பாடல்கள் வெளிவந்துள்ள நிலையில் முறைப்படி வெளியிடப்படாத பீப் பாடல்களுக்கு மட்டும் இவ்வளவு எதிர்ப்பு ஏன்? என்றும் தெரியவில்லை. இவ்வாறு சரத்குமார் கூறியுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலின்போது, சரத்குமாருக்கு ஆதரவாக இருந்த சிம்பு, அவரது அணியின் சார்பில் துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.