close
Choose your channels

சரத்குமாரின் 150வது படத்தின் கதை இதுதான்: செம த்ரில்லர் படமா?

Tuesday, February 22, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர்களை அடுத்து 150வது படம் என்ற மைல்கல்லை சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் தொட்டிருக்கின்றார் என்பதும் அவர் நடிக்கும் 150வது திரைப்படத்தின் டைட்டில் ’தி ஸ்மைல் மேன்’ என்பதையும் நேற்று பார்த்தோம். இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் கதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அம்னீஷியா நோயால் பாதிக்கப்படும், ஓய்வு பெற்ற ஒரு முன்னாள் காவல் அதிகாரி, தனது நினைவுகள் முழுதாக மறந்து போகுமுன், ஒரு சிக்கலான மிக முக்கியமான வழக்கை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறார். அதை கண்டுபிடித்தாரா? என்பதுதான் இந்த படத்தின் கதை. முழுக்க முழுக்க இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில் இப்படம் உருவாகவுள்ளது.

சுப்ரீம் ஸ்டார் சரத்குமார், சிஜா ரோஸ், இனியா,ராஜ்குமார், ஜார்ஜ் மரியான், சுரேஷ் மேனன், குமார் நடராஜன், ரௌடி பேபி புகழ் பேபி ஆழியா, ஶ்ரீகுமார் உள்பட பலர் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்திற்கு ஸ்க்ரிப்ட் வசனத்தை ஆனந்த் எழுதுகிறார். ஶ்ரீ சரவணன் ஒளிப்பத்திவு செய்ய, ஷான் லோகேஷ் படத்தொகுப்பு செய்கிறார். ‘க்’ படப்புகழ் கவாஸ்கர் அவினாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கலை இயக்கத்தை அய்னா. J. ஜெய்காந்த் கவனிக்க, உடை வடிவமைப்பை M. முகம்மது சுபையர் செய்கிறார், மேக்கப் பணிகளை வினோத் சுகுமாரன் செய்ய, புரடக்சன் மேனேஜராக முகேஷ் சர்மா பணியாற்றுகிறார். ஒலி வடிவமைப்பை ஸிங்க் சினிமா (SYNC CINEMA) செய்ய, மக்கள் தொடர்பு - சதீஷ் (AIM). விளம்பர டிசைன் பணிகளை அதின் ஒல்லூர் செய்கிறார். தீபா சலீல் இணை தயாரிப்பு செய்கிறார். மேக்னம் மூவிஸ் சார்பில் சலீல் தாஸ் இப்படத்தை தயாரிக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.