close
Choose your channels

5 லட்ச ரூபாய் கொடுத்தால் ரஜினி குறித்து கருத்து கூறுவேன்: பிரபல நடிகர் நிபந்தனை

Saturday, March 14, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து தனது அரசியல் திட்டங்கள் குறித்தும் கொள்கைகள் குறித்தும், தனது அரசியல் கட்சி எப்படி செயல்படும் குறித்தும், யார் யாருக்கு சீட்டுகள், யார் முதல்வர், யார் கட்சித் தலைவர் என்பது குறித்தும் விளக்கமாக எடுத்துரைத்தார்.

ரஜினியின் இந்த பேச்சு குறித்து கருத்து தெரிவிக்காத அரசியல்வாதிகளே இல்லை என்று கூறலாம். அதுமட்டுமன்றி கடந்த இரண்டு நாட்களாக அனைத்து ஊடகங்களிலும் ரஜினிகாந்த் பேசியது குறித்து தான் விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமாரிடம் செய்தியாளர்கள் ரஜினியின் அரசியல் பேச்சு குறித்து கருத்து கேட்டபோது அவர் ’ரஜினி குறித்து கருத்து தெரிவிக்க வேண்டும் என்றால் ஊடகங்கள் தன்னுடைய வங்கி கணக்கில் 5 லட்ச ரூபாய் பணம் போட வேண்டும் என்றும் அவ்வாறு பணம் போட்டால் மட்டுமே ரஜினி குறித்து கருத்து தெரிவிப்பேன்’ என்று கூறியுள்ளார். சரத்குமாரின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.