close
Choose your channels

பெண் பூசாரியுடன் சபரிமலையில் பெண்களுக்கு தனி கோயில்: பிரபல நடிகரின் திட்டம்

Wednesday, October 31, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டபோதிலும், ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் ஐயப்ப பக்தர்களின் போராட்டத்தால் இதுவரை தீர்ப்புக்கு பின்னர் இன்னும் ஒரு பெண் கூட ஐயப்பன் சன்னிதானத்திற்குள் செல்ல முடியவில்லை

இந்த நிலையில் சபரிமலையில் மத்திய அரசு அல்லது மாநில அரசு இடம் ஒதுக்கி கொடுத்தால் பெண்கள் வழிபட என தனியாக ஐயப்பன் கோவில் கட்டித்தர திட்டமிட்டுள்ளதாக நடிகர் சுரேஷ்கோபி கூறியுள்ளார். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உண்டியல் இல்லாத வகையில் உருவாக்கப்படும் இந்த கோயிலில் பெண் பூசாரிகளை நியமிக்கும் திட்டம் இருப்பதாகவும், இந்த கோவிலில் வைக்கப்படும் ஐயப்பன் விக்கிரகம் நாடு முழுவதும் ஊர்வலமாக எடுத்து சென்று அதன்பின்னர் பிரதிஷ்டை செய்யப்படும் என்றும் சுரேஷ் கோபி மேலும் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.